yarlathirady.com

அரசியலாக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகள்!

[2023-11-16 10:46:00] Views:[21]

சமகாலத்தில் மாவீரர் தின அனுஷ்டிப்புக்கான முன் ஆயத்த நிகழ்வுகள் பல இடங்களில் முன்னெடுக்கப்பபட்டு வருகின்றன. உண்மையில் இம்மாவீரர் தின நிகழ்வுகள் யாருக்காக? எதற்காக? மாவீரர் தின நிகழ்வுகளை நிச்சயம் அனுஷ்டித்தே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பவர்கள் யார்?


இதன் பின்னணியில் இருப்பவர்கள் அரசியல்வாதிகளே.. ஆனால் இவ்வரசியல்வாதிகள் ஈழப்போர் இடம்பெற்றபோது எங்கிருந்தார்கள் ? இவர்கள் நினைத்திருந்தால் அப்போது ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையோ தொடர் போராட்டத்தையோ முன்னெடுத்து யுத்தத்தை நிறுத்த முயற்சி எடுத்திருக்கலாமே ? ஏன் அன்று செய்யவில்லை.ஆனால் இப்போது மட்டும் அவர்களின் அரசியல் நாடகங்களுக்காக இதனை முன்னெடுக்கின்றனர். தற்போது அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி மக்கள் மத்தியில் தனது செல்வாக்கினை அதிகரித்துக் கொள்ளவே இவ்வாறான நிகழ்வுகளை மேற்கொள்கின்றனர்.


எனது நோக்கம் மாவீரர் தின நிகழ்வுகளை அனுஷ்டிக்க வேண்டாம் என்பதல்ல . யதார்த்தத்தையும் உண்மைத்தன்மையும் மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியே ஆகும்.


உண்மையில் சிந்தித்துப் பாருங்கள் மாவீரர் தினத்தை தற்போது நினைவு கூறுவதால் இனி நடக்கப் போவது என்ன ? கடந்த காலத்தை மாற்றியமைக்க இனி எவராலும் முடியாது. இனிவரும் சந்ததியினராவது இந்நாட்டில் சந்தோஷமாக வாழ வேண்டும் அவர்கள் மனதிலும் கடந்த கால கசப்பான சம்பவங்களை கூறி அவர்களையும் மீண்டும் ஒரு இருண்ட யுகம் நோக்கி தள்ளப் போகிறீர்களா? கடந்த காலத்தில் இடம்பெற்ற அனைத்தையும் மறந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ வழி செய்ய வேண்டும். அதைவிடுத்து மீண்டும் இவற்றை இப்போது உள்ள சந்ததியினருக்கு கூறும் பொழுது அது மீண்டும் ஆறாத ரணமாக அவர்கள் மனதில் பதியும் அல்லவா?


உண்மையில் அம்மாவீரர்களுக்கு நீங்கள் நன்றி கூறுவதாக இருந்தால் மாவீரர் தின ஊர்வலங்களுக்கும் பேரணிகளுக்கும் பதாதைகளுக்கும் செலவு செய்யும் தொகையை போரில் கலந்து கொண்டு உயிர் நீத்த மற்றும் கை கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும் போராளிகளின் குடும்பங்களுக்கும் கொடுத்து உதவுங்கள். முன்னாள் போராளிகள் வாழ்கின்ற பின் தங்கிய கிராமங்களை தத்தெடுத்து அக்கிரமங்களின் அபிவிருத்திக்கு என்ன சரி செய்து கொடுங்கள். நம்மவர்கள் கற்பித்தவைகளை மனதில் கொண்டு இனிவரும் சந்ததியினருக்கு இனிய நாட்டை பரிசளியுங்கள்.


மாவீரர்களின் பெயரைச் சொல்லி சமூக சேவைகளை முன்னெடுக்கலாம். முன்னாள் போராளிகள் பலர் இன்று பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் உள்ளனர் .அவர்களுக்கு உதவலாம். பதாதைகளுக்கும் பேரணிகளுக்கும் செலவழிக்கும் பணத்தை முன்னாள் போராளிகளின் நலன் பாதுகாப்புக்கு செலவழிக்கலாம் இதுவே உண்மையாக அவர்களின் புனித பணிக்கு நாம் செய்யும் நன்றியாகும்.


இந்த உலகில் அனைத்து நாடுகளுமே யுத்தத்திற்கு முகம் கொடுத்தே வந்துள்ளன. அதேபோன்று நாமும் முகம் கொடுத்துள்ளோம் .யுத்தம் மௌனித்து 14 வருடங்களாகி விட்டன .இவ்வாறான ஒரு சில தினங்களை பயன்படுத்தி அரசியலாபம் தேட முயற்சிக்கும் அரசியல்வாதிகளை இனங்கண்டு கொள்ளுங்கள். தற்போது இதன் உண்மை தன்மையை விளங்கிக் கொண்டு சரியாக கையாண்டால் எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிகழ்வை அரசியலுக்காக பயன்படுத்துவதை தடுக்கலாம்.


இவர்களின் அரசியல் இலாபங்களுக்காக இத்தகைய நிகழ்வுகளை அரசியலாக முன்னெடுத்து இனிவரும் சந்ததியினர் மத்தியிலும் இனவாதத்தை விதைக்க முயற்சிக்கின்றனர். மக்களிடையே இனவாதமும் ஒற்றுமையின்மையும் காணப்படும் வரையிலேயே இவர்களின் அரசியல் நிலைத்திருக்கும் .இதனாலேயே இவர்கள் இவ்வாறான நிகழ்வுகளை அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு ஒருபோதும் இடம் தராதீர்கள்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.