கிளிநொச்சியில் யுத்தத்தால் இறந்த அனைத்து இன மக்களையும் நினைவு கூரும் நிகழ்வு
[2024-05-18 14:41:10] Views:[15]
கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக நிறுவனத்தின் ஏற்பாட்டில் 30 வருடகால யுத்தத்தினால் உயிரிழந்த அனைத்து இன மக்களையும் நினைவுகூரும் நிகழ்வு இன்று காலை 11 .20 தொடக்கம் 12.15 வரை கிளிநொச்சி பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஏறக்குறைய 1200 பேர் கலந்துகொண்டார்கள். மேலும் இந்து , பௌத்தம் , கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மத தலைவர்களும் கலந்துகொண்டனர்.
அனைவரும் அமைதியான முறையில் இனம் மதம் கடந்து ஒற்றுமையுடனும் ஆர்வத்துடனும் நினைவுச்சுடர் ஏற்றி உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்து மலர் தூவி நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்திருந்தனர் .
மேலும் இந்நிகழ்வு " அனைத்து இன மக்களின் ஐக்கியம் " எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.










