yarlathirady.com

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 33 வருடங்கள் நிறைவு..!

[2024-05-21 21:36:04] Views:[12]

இன்றைய தினம் இலங்கை, இந்திய நாடுகளின் வரலாற்றில் மறக்க முடியாத சோகத்தால் நிரம்பப் பெற்ற ஒரு நாளாகும். அதாவது கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி இதே போன்றதொரு நாளில் தான் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலினால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டார். 33 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் அதன் வடுக்கள் இன்றும் மாறவில்லை.

இச்சம்பவமானது சர்வதேச ரீதியாக எமது தாய் நாட்டின் பெயரை கறை படிய செய்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த சம்பவத்தின் பின்னர் இந்தியாவிற்கும் தமிழ் மக்களுக்குமான இணைப்பு சற்று குறைய தொடங்கியது என்றே கூறலாம்.

இந்தியாவிலிருந்து எமக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் பல கைவிட்டுச் சென்றன. ஒருவேளை ராஜீவ் காந்தி உயிரோடு இருந்திருந்தால் 2009 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பின் அழிவு கூட நிகழ்ந்திருக்காது. எமது ஈழத் தமிழ் மக்களுக்கு இந்தியாவின் பல்வேறு உதவிகள் கிடைத்திருக்கும்.

உதாரணமாக 1987ஆம் ஆண்டு வடமாகாணத்தில் வடமராட்சி இராணுவ நடவடிக்கைகளால் யாழ்ப்பாண கோட்டையை கைப்பற்ற முற்பட்ட வேளையில் ராஜீவ்காந்தியின் தாயாரான இந்திராகாந்தி அம்மையாரின் பணிப்புரைக்கமைய அங்கிருந்த மக்களுக்கு வானூர்திகளின் மூலமாக உணவு வழங்கப்பட்டதுடன் குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது.

விடுதலை புலிகளின் மிலேச்சத்தனமான செயலால் இந்தியாவிலிருந்து எமக்கு கிடைக்கவிருந்த பல்வேறு நன்மைகள் கைவிட்டுச் சென்றன. இதுவொரு வரலாற்று பிழை என்றே கூறலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்கு பயிற்சி அளித்த இந்திய நாட்டின் மிக முக்கிய தலைவரை கொலை செய்தமை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இதனாலேயே விடுதலைப்புலிகள் மீதான தடையானது இன்று வரை இந்தியாவால் நீக்கப்படாமல் இருக்கின்றது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.