yarlathirady.com

யாழ் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டங்கள் வலியுறுத்துவது எதனை..?

[2024-05-28 21:14:02] Views:[17]

வழக்கம்போல இம்முறையும் பௌர்ணமி தினமன்று யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நானும் இத்திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். இதில் மக்கள் அதிகமாக கலந்து கொள்வதாக தெரியவில்லை.

இது மக்களுக்கான போராட்டம் அல்ல இது குறிப்பிட்ட ஒரு சில அரசியல்வாதிகளின் அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் அரசியல் நாடகம் என்பதை மக்கள் அறிந்துள்ளனர். முழுமையாக அப்பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்போராட்டங்களை முன்னெடுப்பதாக தெரியவில்லை விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவு சொற்ப அளவிலான அதாவது 10 -15 பேரே கலந்து கொள்கின்றனர்.

அனைவரும் உணர்வுபூர்வமாக, உரிமைக்காக குரல் கொடுப்பதாக தெரியவில்லை. அரசியல்வாதிகளின் அரசியல் ரீதியான வழிகாட்டுதலின் பேரிலேயே இவர்கள் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது.

அனைத்து மதத்தினரது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது எமது கடமை. மற்றைய நாட்களில் அமைதியாக இருந்துவிட்டு பௌர்ணமி நாட்களில் அவர்கள் வழிப்பாட்டிற்காக செல்லும் வேளையில் மாத்திரம் போராட்டம் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாகும். அது அம்மக்களின் மனதை பாதிக்கும் அல்லவா? நான் இங்கு பெரும்பான்மை ஆதரவாளனாக இதனை முன்வைக்கவில்லை மனிதாபிமான ரீதியாக இதனை முன்வைக்கின்றேன்.

எமது தமிழ் மக்களின் அபிலாசைகள் மற்றும் பிரச்சினைகள் என எவ்வளவோ இருக்கின்ற போது அவற்றை எல்லாம் விட்டுவிட்டு எமது தாயக மக்களை இனவாத மதவாத ரீதியான விடயங்களில் வழிநடத்த முயல்வது இவர்களின் கீழ்த்தரமான அரசியலை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

எத்தனையோ பிரச்சினைகளில் தாயகம் தீர்வு காண முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறான மோசமான விடயங்களுக்கு மட்டும் இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பது இவர்களின் அரசியல் சுயலாபத்திற்கே.

மேலும் இத்திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டங்களில் தாயக மக்கள் முழுமையாக எவரும் பங்கு கொள்ளவில்லை. இது குறிப்பிட்ட அரசியல்வாதியினதும் அரசியல் கட்சியினதும் செயற்பாடே ஒழிய முழு தாயக மக்களின் வெளிப்பாடு கிடையாது என்பது தெளிவாக புலப்படுகின்றது.

மக்கள் தெளிவாக உள்ளனர். அவர்கள் மீண்டும் ஒரு இனவாத மதவாத பிரச்சனைகள் நாட்டில் எழுவதினை விரும்பவில்லை ஆனால் எமது தமிழ் அரசியல் தலைமைகளோ அவ்வாறான பிரச்சினைகளை மேலும் உருவாக்குகின்றனர். தங்களின் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.