yarlathirady.com

விஜய்க்கு ரூ.1.5 கோடியை அபராதமாக விதித்த உயர் நீதிமன்றம்.!

[2026-02-08 12:31:25] Views:[15]

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘புலி’ திரைப்படத்திற்காக அவர் பெற்றதாக கூறப்படும் ரூபாய் 15 கோடி சம்பளத்தை வருமான வரி கணக்கில் முறையாக காட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் விதிக்கப்பட்டது.

குறித்த அபராதத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், நடிகர் விஜய் ரூபாய் 1.5 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலி’ திரைப்படத்திற்காக நடிகர் விஜய் ரூபாய் 15 கோடி சம்பளம் பெற்றதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த தொகையை அவர் தனது வருமான வரி கணக்கில் முழுமையாக காட்டவில்லை என வருமான வரித்துறை குற்றம்சாட்டியது.

இதையடுத்து, வருமான வரி சட்ட விதிகளின் அடிப்படையில், அந்த தொகையின் 10 சதவீதம், அதாவது ரூபாய் 1.5 கோடி அபராதமாக விதிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த அபராதத்தை எதிர்த்து, நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், வருமான வரித்துறை விதித்த அபராதம் சட்டபூர்வமற்றது என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் ரூபாய் 1.5 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.