இலங்கையில் 150 வெளிநாட்டவர்கள் அதிரடி கைது..!!
[2026-04-03 11:29:24] Views:[82]
சிலாபம், அம்பகதவில பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த 150 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பாரிய கணினி குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 129 சீன ஆண்கள் மற்றும் 6 பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுடன் வியட்நாமை சேர்ந்த 10 ஆண்கள் மற்றும் 3 பெண்கள், தாய்வான் சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஒரு மலேசியப் பிரஜையும் அடங்குவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 99 கணினிகள், 26 மடிக்கணினிகள் மற்றும் 259 நவீன ரக கையடக்க தொலைபேசிகளையும் அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இவர்கள் விடுதிக்குள்ளேயே முடங்கியிருந்து சர்வதேச ரீதியிலான கணினி மோசடிகள் அல்லது நிதி மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.










