யாழில் பல குற்ற செயல்களில் ஈடுபட்டுவந்த நபர் கை குண்டுடன் கைது..!!
[2026-04-05 10:45:44] Views:[79]
அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு கடந்த 03ஆம் திகதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு , இளைஞனுக்கு படுகாயமேற்படுத்தியதுடன் , இளைஞனின் மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து சென்ற கும்பலில் ஒருவராக குறித்த இளைஞனும் செயற்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.










