யாழ். உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!
[2026-04-06 18:36:14] Views:[77]
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இனி வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல். திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலும் புத்தளம் மற்றும் யாழ் மாவட்டங்களிலும் கரையோர பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (06.04.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு. வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.










