யாழில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது!
[2026-04-07 12:47:28] Views:[73]
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்கள் உள்ளிட்ட திருட்டுக்களுடன் தொடர்புடைய நான்கு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ் நகரில் நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் உள்ள கடையில் திருடப்பட்ட 360 000/= ரூபா பெறுமதியான வலைகளையும் கலட்டி அம்மன் கோயில் பகுதி அருகில் உள்ள வீடுகளில் திருடப்பட்ட மூன்றரை பவுண் தங்க மோதிரம் மற்றும் 25 000/= ரூபாய் என்பன களவாடப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் நான்கு பேரை கைது செய்ததுடன் களவாடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.










