யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்த தானம்...!
[2026-04-09 11:41:08] Views:[61]
யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை அடுத்து, வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை பணியாளர்கள் இரத்த தானம் வழங்கியுள்ளனர்.
இரத்த வங்கியில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற இரத்த தான நிகழ்வில், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர் உத்தியோகத்தர்கள், துணை மருத்துவத் துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்று இரத்ததானம் வழங்கியுள்ளனர்
இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் இரத்த வங்கியினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.










