மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்
[2026-04-11 10:45:20] Views:[58]
எதிர்வரும் புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாகவும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த காலங்களில் பொதுமக்கள் மின்சாரத்தைச் சேமிக்க வழங்கிய ஒத்துழைப்பைப் போலவே, இம்முறையும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இரவு 6 மணி முதல் 10 மணி வரை மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால், அச்சமயத்தில் தேவையற்ற மின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.










