"மதங்கள் வேறு - மனிதம் ஒன்று" - நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சர்வமத மாநாடு
[2026-04-19 21:29:45] Views:[73]
"மதங்கள் வேறு - மனிதம் ஒன்று" எனும் மகுட வாசகத்துடன், சமுதாயங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சர்வமத மாநாடு நேற்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
'சொன்ட்' நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த மாநாடு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா இந்நிகழ்வில் தலைமை உரையாற்றினார். இதன்போது, பல்வேறு மதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மனிதநேயத்தின் அவசியத்தையும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதி பிரம்மஹீ ச.பத்மநாபன், அருட்தந்தை எம்.செல்வரட்ணம் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மௌலவி எம்.றமீழ் ஆகியோர் கலந்துகொண்டனர்.










