நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத் திட்டம்
[2026-04-19 21:41:28] Views:[88]
நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத் திட்டம் 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமை பெறும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நெடுந்தீவில் 2015 ஜூனில் சுமார் 105 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு (SWRO) நிலையம் தற்போது ஓரளவு செயல்பாட்டில் இருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் முழுமையான செயல்பாட்டுத் திறனை எட்டும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையம் வடிவமைக்கப்பட்ட நாளாந்த கொள்ளளவை அடையாமல், தற்போது சுமார் 60 கன மீட்டர் (m³/day) அளவிலேயே உற்பத்தி செய்து வருகிறது.
நெடுந்தீவின் நீண்டகால குடிநீர் தேவைக்கான நிரந்தரத் தீர்வாக, 300 கன மீட்டர்/நாள் கொள்ளளவு கொண்ட புதிய கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான விரிவாக்கத் திட்டத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் தொடங்கியுள்ளது.
இத்திட்டம் நெடுந்தீவின் முழுக் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் அமையும். 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய நிலையத்தை முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










