யாழில் சோகம்: கடலில் மூழ்கி நபர் ஒருவர் மரணம்..!!
[2026-04-20 12:14:13] Views:[72]
வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர்களுடன் கடலில் நீராட சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கட்டுவான் பகுதியை 48 வயது வயதுடையநவபார ஒருவரே இவ்வாறு பரிதாமாக உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள உறவினர்களுடன்,யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர்களும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கீரிமலை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு கடலில் நீராடிய வேளை குறித்த நபர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து, அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,சில மணி நேரத்தில் காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.










