யாழ் நகர மேம்பாட்டிற்கு 250 மில்லியன் நிதி ஒதுக்கீடு
[2026-04-23 19:04:36] Views:[86]
யாழ் நகரை இவ்வாண்டிலிருந்து 05 ஆண்டிற்குள் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு, முதல் கட்டமாக இவ்வாண்டு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.
மேலும் பழைய பேரூந்து நிலையம் தொடர்பாகவும், யாழ் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தின் திண்மக்கழிவு அகற்றலில் உள்ள பிரச்சனை தொடர்பாகவும் இதற்கான முன்மொழிவுகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட தரப்புடன் விரிவாக ஆராயப்பட்டது.
அதேவேளை போக்குவரத்து சேவைகளை இலகுபடுத்த யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை (Metro Bus) வழங்க நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் உறுதியளித்தார்.










