தொடர்ந்து 03 நாட்களுக்கு மதுபான சாலைகள் பூட்டு.
[2026-04-24 21:34:15] Views:[106]
எதிர்வரும் மே மாதத்தில் சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் வெசாக் பூரணையை முன்னிட்டு, நாட்டின் அனைத்து மதுபான சாலைகளையும் மூன்று நாட்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு இணங்க, இந்த ஆண்டு வைகாசி விசாக பூரணைதினம் மே 30 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளதுடன் அதற்கு அடுத்த நாளான மே 31 ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 நாட்களே மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.
மேலும், மே 27 ஆம் திகதி முதல் ஜூன் 02 வரை 'தேசிய வெசாக் வாரம்' ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் நாடு முழுவதும் பல்வேறு சமய மற்றும் கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










