ஆபத்தான பொருளை உடைமையில் வைத்திருந்த பெண்ணுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு...!!
[2026-05-22 17:28:32] Views:[81]
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
பொம்மைவெளி பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 1 கிராம் 475 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், நேற்றையதினம் குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.
அந்நிலையில் மேல் நீதிமன்றில் வழக்கு தீர்ப்புக்காக அழைக்கப்பட்ட போது, குறித்த பெண்ணை குற்றவாளியாக குறிப்பிட்டு 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன், ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணமும் விதித்தது. தண்ட பணம் செலுத்த தவறின், ஒரு வருட கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










