எரிபொருள் விலை தொடர்பில் அறிவிப்பு...!
[2026-05-27 22:11:50] Views:[112]
எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது போதுமான அளவில் உள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த விநியோக முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே கூறுகையில், இந்த மாதம் 28 மற்றும் 31ஆம் திகதிகளில் மேலும் இரண்டு மசகு எண்ணெய் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், எரிபொருள் விலை உயர்வு அல்லது குறைப்பு தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.










