இந்திய நிறுவனத்துடன் கை கோர்க்கும் இலங்கை கிரிக்கெட் அணி..!
[2024-05-08 11:38:51] Views:[11]
உலககிண்ண இருபதுக்கு இருபது போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான "அமுல்" நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகளவு பால் உற்பத்தி செய்யும் நிறுவனத்துடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி சில்வா அறிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஒரு சிறந்த நடவடிக்கை என்றும், இலங்கை அணியுடன் இணைந்திருப்பதன் காரணமாக, நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியடைய முடியும் என்றும், சர்வதேச பார்வையாளர்களிடையே இந்த உற்பத்தி மேலும் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.










