yarlathirady.com

மூன்று ஜாம்பவான்கள் இல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி.!

[2025-06-20 12:28:39] Views:[17]

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று ஜாம்பவான் வீரர்கள் இல்லாத இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இது இந்திய டெஸ்ட் அணியின் புதிய சகாப்தத்தின் துவக்கமாக அமைந்திருப்பதையே சுட்டிக்காட்டுகிறது.

ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூவரில் ஒருவராவது இந்த 14 ஆண்டுகளில் இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்று இருந்தனர்.

2011 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிதான் கடைசியாக விராட் கோலி, ரோஹித் சர்மா அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூவரில் ஒருவரும் விளையாடாத போட்டியாக இருந்தது.

அதன் பிறகு இந்திய அணி விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இவர்கள் மூவரில் ஒருவராவது பிளேயிங் லெவனில் இடம் பிடித்து ஆடி இருக்கின்றனர்.

2021 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அந்தக் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்று விளையாடி இருந்தார்.

அந்த வகையில், சுமார் 14 ஆண்டுகள் கழித்து இந்திய டெஸ்ட் அணியின் மூன்று ஜாம்பவான்களான விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய மூவரும் இல்லாத ஒரு இந்திய அணி இங்கிலாந்தில் விளையாட உள்ளது. இது நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும், இளம் வயதே ஆன சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி களம் இறங்க உள்ளது. இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணி ஒரு புதிய சகாப்தத்தில் காலடி எடுத்து வைக்கிறது. மூத்த வீரர்கள் இல்லாத இந்திய அணி சாதிக்குமா? அல்லது தடுமாறுமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.