யாழில் வெசாக் கொண்டாட்டம்
[2026-05-31 22:43:11]
யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி ஆகியோர் இணைந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
யாழில் அசம்பாவிதம்: ஒரே இரவில் 2 கொள்ளைச் சம்பவங்கள்..!
[2026-05-31 22:27:41]
சீட்டுப் பணம் கொடுப்பதற்காக, வசூலிக்கப்பட்ட பணம் மற்றும் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த தங்க நகைகளே இவ்வாறு கொள்ளையடிகப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை
[2026-05-30 23:06:58]
கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
சைபர் அச்சுறுத்தல்களை நம்ப வேண்டாம்: பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்..!
[2026-05-30 23:02:44]
போக்குவரத்து குற்றங்களுக்காக தண்டப்பணம் செலுத்தவுள்ளதாக தெரிவித்து இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் தகவல்களுக்கு ஏமாற வேண்டாமென பொலிஸ் ஊடக பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
பெருமளவு வெளிநாட்டு சிகரட்டுடன் 18 பேர் கைது!
[2026-05-30 23:00:53]
சட்டவிரோதமான முறையில் 31,380,000 பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை டுபாய் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
யாழில் கடலுக்கு சென்றவர்கள் மாயம் - 20க்கும் மேற்பட்ட படகுகள் தேடுதலில்...!
[2026-05-29 12:07:11]
யாழ்ப்பாணம் - வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி இன்றைய தினமும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்...!
[2026-05-29 11:46:41]
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாத கொடுப்பனவுகள் இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான ஏற்பாடுகள் .....
வெசாக் தினத்தை முன்னிட்டு மே 31 அரசாங்க விடுமுறையாக அறிவிப்பு
[2026-05-28 22:27:14]
அரச வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலை விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதி
[2026-05-28 22:25:53]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக கணினி விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கதிரவேலு தபோதரன் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை' மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
[2026-05-28 22:24:36]
'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை' ஆகிய இரு பயணிகள் படகுகளும் அடுத்த மாதம் நடுப்பகுதியில் சேவைக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதால், அதுவரையில் வாடகை படகை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டில் இதுவரையில் 203 பேர் மூளைக் காய்ச்சலால் பாதிப்பு...!
[2026-05-27 22:45:17]
நாட்டின் பல பகுதிகளிலிருந்து இதுவரையில் 203 பேர் மூளைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை தொடர்பில் அறிவிப்பு...!
[2026-05-27 22:11:50]
எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது போதுமான அளவில் உள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த விநியோக முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
வித்யா கொலைக் குற்றவாளியின் இறுதி கிரியை குறித்து வெளியாகிய தகவல்...!
[2026-05-26 11:31:46]
யாழ். சிறைச்சாலையில் நேற்றை தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை..!!
[2026-05-26 11:29:36]
நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை படிப்படியாகச் செயல்பட்டு வருவதால், அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பான தகவல்.
[2026-05-25 21:37:01]
2025ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளை அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு...!
[2026-05-25 21:33:17]
புங்குடுதீவு - வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அம்மாச்சி உணவகத்திற்கு பூட்டு...!!!
[2026-05-22 17:50:46]
சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்ததாக திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.









