இந்திய தேர்தல் முடிவும் கச்சத்தீவும்
[2024-06-07 21:13:15]
இனவாத மதவாத கோமாளி கூத்துக்களை காட்டி எமது தமிழ் மக்களை ஏமாற்றுவதை விடுத்து இவ்விடயத்திலாவது முறையான தீர்வைப் பெற்றுத் தாருங்கள்.
தொடரும் தாயக கடற்றொழிலாளர்களின் அவலங்களை கண்டுகொள்ளாத தமிழ் அரசியல் தலைமைகள்...!
[2024-05-31 20:42:36]
இன்றைய காலத்தில் எமது தாயக கடற்றொழிலாளர்கள் அன்றாடம் தமது வாழ்வாதாரத்திற்கே போராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எமது கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளும் பிரச்சினைகளும் இதுவரை எவராலும் கண்டுகொள்ள முடியாமல் இருப்பது வேதனைக்குரியதாகும்.
யாழ் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டங்கள் வலியுறுத்துவது எதனை..?
[2024-05-28 21:14:02]
வழக்கம்போல இம்முறையும் பௌர்ணமி தினமன்று யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நானும் இத்திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். இதில் மக்கள் அதிகமாக கலந்து கொள்வதாக தெரியவில்லை.
பூதாகரமாக மாறியுள்ள கச்சத்தீவு விவகாரமும் கண்டுக் கொள்ளாத எமது தமிழ் அரசியல் தலைமைகளும்..:
[2024-05-23 12:40:29]
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய எதிரொலியாக கச்சத்தீவு விவகாரம் வெளிப்பட்டுள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே . பாரதீய ஜனதா கட்சியினர் நாங்கள் ஆட்சி பீடம் ஏறினால் கட்டாயமாக கச்சத்தீவை மீட்போம் என சூளுரைத்து வரும் வேளையில் இவ்விடயம் இன்னமும் எமது தமிழ் அரசியல் தலைமைகளின் காதில் விழவில்லை போலும். எந்தவித சலனமும் இதுவரை தென்படவில்லை. சிறிய அளவில் கூட இவர்கள் தங்கள் எதிர்ப்பையோ கண்டனத்தையோ வெளிப்படுத்தாமல் இருப்பது ஏனோ ?
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 33 வருடங்கள் நிறைவு..!
[2024-05-21 21:36:04]
இன்றைய தினம் இலங்கை, இந்திய நாடுகளின் வரலாற்றில் மறக்க முடியாத சோகத்தால் நிரம்பப் பெற்ற ஒரு நாளாகும். அதாவது கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி இதே போன்றதொரு நாளில் தான் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலினால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டார். 33 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் அதன் வடுக்கள் இன்றும் மாறவில்லை.
பயங்கரவாதத்தின் தோல்வி !
[2024-05-20 14:13:52]
ஹிட்லர் ஏப்ரல் 30, 1945 அன்று பெர்லின் பதுங்கு குழிக்கு அருகில் தற்கொலை செய்து கொண்டார். ஹிட்லர் வேறொரு நாட்டிற்குத் தப்பிச் சென்று பின்னர் இயற்கையான காரணங்களால் இறந்தார் என்று நம்புபவர்களும் இருந்தனர். ஆனால் 2018 இல் பிரிட்டிஷ் செய்தித்தாள் வெளியிட்ட கட்டுரையில் என்ன தெரியவந்தது? நாசி தலைவர் உண்மையில் 1945 இல் இறந்துவிட்டார் என்பதை பிரெஞ்சு நிபுணர்கள் குழு உறுதிப்படுத்தியது. மாஸ்கோவில் பாதுகாப்பாக உள்ள ஹிட்லரின் பற்களை பயன்படுத்தி நடத்திய ஆய்வின் மூலம் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளது. ஹிட்லரின் மரணத்தைப் போலவே பிரபாகரனின் மரணத்திலும் நம்பிக்கை இல்லாத ஒரு கூட்டம் புலி ஆதரவாளர்களிடையே இருந்தது. அது 2009 மே மாதம். ஆனால் இப்போது அப்படிப்பட்ட குழுக்களைப் பற்றி நாம் கேள்விப்படுவதில்லை.
கிளிநொச்சியில் யுத்தத்தால் இறந்த அனைத்து இன மக்களையும் நினைவு கூரும் நிகழ்வு
[2024-05-18 14:41:10]
இந்நிகழ்வு " அனைத்து இன மக்களின் ஐக்கியம் " எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நினைவேந்தல் நிகழ்வுகளை அரசியல் மேடையாக்க வேண்டாம் - திருகோணமலை மக்கள் !
[2024-05-14 15:13:22]
புலம்பெயர்ந்தோரின் நிகழ்ச்சி நிரலுக்காக தமிழ் மக்களின் உயிரை பலியிடாதீர்கள்
பெற்றோர்களே எதிர்கால சந்ததியினரை தவறாக வழிநடத்தாதீர்கள்
[2024-05-14 10:20:21]
இந்நாடு அனைவருக்கும் உரியது. இங்கு தமிழர் சிங்களவர் மற்றும் முஸ்லிம் என்ற பேதம் இல்லை. அவ்வாறு எமது பிள்ளைகளை வழி நடத்துங்கள்
அரசியல் மயமாகக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்
[2024-05-10 15:27:40]
ஆரம்ப காலத்தில் உணர்வுபூர்வமாகவும் ஆத்மார்த்தமாகவும் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நினைவேந்தல்கள் தற்போது அதே உணர்ச்சி பெருக்கோடு பின்பற்றப்படுகின்றதா என ஆராய்ந்து பார்க்கும்போது நிச்சயமாக இல்லை என்பதை எவரொருவராலும் மறுக்க முடியாது.
புதிய அரசியல் நாடகம் பொது வேட்பாளரா?
[2024-04-30 13:04:15]
பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி அதன் மூலம் இவர்கள் அடையப் போகும் இலக்கு என்ன என்பது இவர்களுக்கே தெரியாது.
அதிகமான வெப்ப காலத்தில் உடல் சூட்டை தனிக்க இந்த பொருள் மட்டுமே போதும்....!
[2024-04-18 09:33:14]
கோடை காலத்தில் உடல் சூட்டை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பொருட்களில் ஒன்றான நன்னாரி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
வெப்ப காலத்தில் உடல் சூட்டை குறைக்க பயன்படும் உணவுகள்
[2024-04-08 16:31:16]
இந்த வெப்ப காலத்தில் நீங்கள் உடல் சூட்டினால் மிகவும் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் கீழே கூறப்பட்டுள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்ளுங்கள். இதனால் உடல் சூட்டை விரைவில் குறைப்பதோடு, உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
சோற்றுக்கற்றாழை அள்ளித்தரும் நன்மைகள் ஏராளம்.
[2024-04-04 11:43:06]
கற்றாழை காயங்களை குணப்படுத்தும் மற்றும் சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. கற்றாழை இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றைக் குறைக்கவும் பயன்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேனின் அற்புதமான மகத்துவங்கள்.
[2024-04-04 09:04:23]
பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட உணவுகளிலேயே மனித ரத்தத்திற்கு மிக நெருக்கமான உணவுப் பொருள் தேன் என கூறப்படுகிறது. ரசாயனத் தன்மையில் சிறிதளவு மாற்றம் செய்தாலே அது மனித ரத்தத்தின் தன்மையைப் பெற்றுவிடுமாம்.
முட்டாள்கள் தினமாக ஏப்ரல் முதலாம் திகதி கொண்டாடுவதன் பின்னனி.
[2024-04-01 10:56:34]
ஆண்டுதோறும் ஏப்ரல் முதலாம் திகதியை உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
பூமியின் சுழற்சி நேரத்தில் மாற்றம் - விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
[2024-03-29 22:09:40]
பூமியானது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.









